இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

என்றென்றும் அன்புடன்

கதையைப் பற்றி ஒரு கண்ணோட்டம் நான் எழுத பழகிய காலகட்டங்களில் புனையப்பட்ட கதையிது. இதனுடைய இலக்கிய வளமை எப்படி இருக்கும் என தெரியாமல், அந்த பதிம வயதில், என்னை வெகுவாக பாதித்த விஷயங்களைக் கதைகளாக உருமாற்ற முனைந்திருக்கிறேன், இன்றைய துரித உலகில் இணையம், ஐ-போன் என்று மூழ்கிவிட்ட பிரகிதிகளுக்கு, 15-20 வருடங்களுக்கு முந்தைய தொலைதொடர்பு சாதனாமான கடித வரைதலும், அதற்கான காத்திருப்பும் புரியுமா என தெரியவில்லை. தோட்டபுற இறுக்கங்களிலிருந்து விடுபட்டு, சுயமாக தொழிற்பேட்டைகளில் வேலை செய்ய தொடங்கிய, ஓரளவு படித்த, இலக்கிய ஆர்வமுள்ள பெண்கள் அப்போது எதிர்நோக்கிய ஒரு பிரச்சனைதான் இதுவும். மாத சஞ்சிகைகளிம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பேனா நட்பு பெண்களின் மனமுதிர்ச்சியை விரிவாக்கிய போதிலும், சமூகம் மற்றும் ஒழுக்க விதிகளில் அது உண்டுபண்ணியத் தாக்கங்கள்தான் இந்த கதையின் பொறி. சினேகமுடன் இராஜேஸ் இராமசாமி --------------------------------------------------------------------------------- "இதோ பாருடி, நீ சொல்லறது கதைக்கும் காவியத்துக்கும்தான் வக்கணையா இருக்கும். மனுசியா உலகத்துல பொறந்துட்டா நாலு பேருக்கும், ஊர...