இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
சிறுகதை வாசகப் பார்வை  மறைந்து திரியும் கிழவன் -சுரேஷ்குமார் இந்திரஜித் “Take things for granted” அப்படி ஒரு சொல்லாடல் ஆங்கிலதில் உண்டு. நமக்கு கிடைத்தப் பொக்கிஷத்தை , அதன் உச்சங்களை உணராது , போகிற போக்கில் சாதரணமாய் எடுத்துக் கொள்வது. இன்றைய தலைமுறையினரின் ஒரு சாபம் போலும் , அப்பன் சொத்தைக் குந்தி தின்னத்தான் முடிகிறதே தவிர , அதனைச் சம்பாதிக்க அந்த தகப்பன் கண்டுய்த்த வேதனைகளும் வலிகளும் தெரிவதேயில்லை.  அப்படி ஒரு வெறுமையை , மனிதர்கள் கடத்தாத அனுபவங்களை இச்சிறுகதை அதன் போக்கில் சொல்கிறது. வாழ்க்கை கால வர்த்தமானங்களின்படி எவ்வாறு வேறுப்பட்டிருக்கிறது என்பதை இகதையின் வாயிலாக உணர முடிகிறது. சுதந்திர வேட்கையின் உச்சத்தில் , தன்னைக் காவு கொடுத்த கிழவனையும் அவனது சகாக்களும் ஒரு புறத்தில் இருக்க , மறுபுறத்தில் இந்த சுதந்திரம் கொடுத்த இறுமாப்பில் , அயிரை மீனும் கள்ளும் குடித்து களி இன்பம் காணும் வாழ்க்கையும் , தற்கால மனிதர்களின் மீதான கேள்விகளை எழுப்புகிறது. ஒரே திரையில் , இரு விதமான வாழ்க்கைகள் . இந்த இரண்டு வாழ்க்கைகளுக்கான முடிச்சு அவிழ்ந்து , இரண்டும் தனி தனியே வேறுப்...