புனர்ஜென்மம்
இன்றைக்கு என்னவென்றே தெரியவில்லை , மூளைக்குள் ஒருவித மாசி படிந்த தூக்கமும் , கண்களில் சொல்லதெரியாத வெறுமையும் குடிக் கொண்டிருப்பதாக எனக்கு தெரிகிறது. நடக்கும் நடையில் ஒ ர் ஒழுங்கில்லை , மனதுக்குள் சதா ஓடிக்கொண்டிருக்கும் உருதெரியாத பிம்பங்க ளா ய் வாழ்க்கை நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இரவு எட்டு மணிக்கு என்னைப் பார்ப்பதற்கு வருதாக சொன்ன டேனியலில் முகம் , சமய சந்தர்ப்பம் தெரியாமல் என் நினைவுக்கு வருகிறது. அவனைப் பற்றிய எந்த ஒரு உருவகமும் எனது மனதில் இல்லாவிட்டாலும் கூட , ஏதோ ஒரு வகையில் அவனது அருகாமை எனக்கு சற்று இதத்தைத் தருக்கிறது , காயும் பாலை நிலத்தில் குளிர் கா ற்று லேசாய் தீண்டுவது போல். ஆனால் , எல்லா உறவுகளூம் தென்றலாய் , இளங்குளிராய் இருப்பதில்லையே. ஏனோ இந்நேரத்தில் எனக்கு வாசுவின் முகம் தானாக நினைவிற்கு வரு கி றது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்த அந்த முகத்தை இன்னும் என்னால் மறக்க இயலவில்லை. முகம் என்று சொல்வதை விட அவனது ஸ்பரிச பிரயோகங்கள்தான் எனது உடலை ச் சிலிர்க்கவைக்கின்றன. மனிதர்களை முகங்களாய் அடையாளப்படுத்தும் காலத்தை க் கடந்து , அவர்கள் விட்டு சென்ற நின...