இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாவலுக்கான விசைமுகம்

படம்
முதல் விசை தேனடையாய், பல உள் விரிவாக்கங்களால் புடைத்து விம்மிக் கொண்டிருக்கும் சமுகத்தில், இருண்ட பிரதேசங்கள் நிறையவே உண்டு. மாபியா, இலுமினாட்டி, பால் திரிபு கட்டமைப்புகள், கள்ளக்கடத்தல், தீவிரவாதம் என இந்த மாயா உலகங்களின் பட்டியல் காலதேச வர்த்தமானத்தின்படி நீண்டு கொண்டுதான் செல்கிறது. இந்த இருண்ட உலகங்களின் இருப்பு மண்ணில் மறைந்து துளிர் விடும் பச்சையாய், ஆழ சமுத்திரத்தின் பிரம்மாண்டமான ஆக்டோபஸ் கால்களின் நீட்சியாய், யதார்த்த உலகை மாய வலையில் சிக்கவைத்து, சமூக பிரக்ஞையில் வலுவாய் அமர்ந்துள்ளது. இந்த தனிப்பட்ட உலகங்கங்களில் இருந்து விலகி, சமூகத்தின் அக்கறைக்கு இலக்காகாத, இன்னும் தன் இருப்பை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளாத ஓர் உலகமாய், ஒரு பிரிவு இருந்தும் இல்லாமலும், புரிந்தும் புரியாமாலும் இயங்கிக் கொண்டுதான் வருகிறது. பால்திரிபினர் என அறியப்படும் திருநம்பிகளின் உலகம். சிலுவையென பெண்ணுடலில் சிறைப்பட்ட ஆண்களின் ஆத்மாக்கள் ஆரோகணிக்கும் உலகம். ஆணாதிக்கம் மிகுந்த உலகத்தின் பிடியில் இயங்கும் சமுக ஏடுகளில், இன்னும் தெளிவாய் பதியப்படாத ஒர் இருண்ட உலகம்.  திருநம்பிகளைப் பற்றிய நமது அறிதலும் அறி...